Many many thanks to the contributors, website administrators, friends etc., for their placement of their views
for the upliftment of mankind in the world

Monday, October 3, 2011

முக்கியப்பிராணன்

முக்கியப்பிராணன்
உட்பிராணன்
                                                                      
பிராணன் - இதயத்தின் அனைத்து பகுதிகளிலும்

அபானன் - வயிறு, புஜங்கள் , பெரீனியம்

வியானன்- உடல் முழுவதும்

உதானன் - இதயம், தொண்டை, பிளேட் ஏரியா , தலை , கண்புருவம்

சமானன்- நேவல் (வயிறு)

கூர்மன் - கண் இமைகள்

தனஞ்செயன் - எலும்புகள் ,சதை , தோல், ரத்தம் , நரம்புகள் , உரோமம் கிருகரன் -வயிற்றின் சிறிது மேல்புறம்

நாகன் - வயிற்றின் சிறிது மேல்புறம்

தேவதத்தன் - தொண்டை, மூச்சுக்குழாய் மேல்புறம்


மூலாதாரம் -பூமி

சுவாதிஷ்டானம் -நீர்

மணிபூரகம் -நெருப்பு

அனாகதம் -காற்று

விசுத்தி- ஆகாயம்


மூலாதாரம் - குறி, குதம், தொப்புள் கீழ்ப்பகுதி முழுவதும்

சுவாதிஷ்டானம் - தொப்புள், வயிற்றின் கீழ்ப்புறம், சிறுகுடல் ,பெருகுடல்

மணிபூரகம் -மேல் வயிறு முழுதும் , பித்தம் , கணையம் , இரைப்பை, சிறுநீரகம், வயிற்றின் அனைத்து உள்ளுறுப்புகள்

அனாகதம் - வயிற்றின் மேல்புறம் முதல் இதயம், மூச்சுப்பை,

விசுத்தி - மூச்சுக்குழல் , தொண்டை முழுவதும்,

ஆக்ஞை - கண் , மூக்கு இரண்டின் நடுப்புறம் , கீழ் மேல்புறம் பிடரிக்கு நேர் பின்புறம் , நடுமூக்கின் வழி புருவ மத்தி வழி . நெற்றி (நடு, மேல்)


பிராணாயாமம் (யோகம்) என்பது பாரதத்தின் கிடைத்ததற்கரிய சொத்து.
இங்கிருந்தே இக்கலை உலகம் முழுவதும் பரவியுள்ளது.


இதைக் கண்டறிந்து காலம் காலமாக இந்த பயிற்சியில் ஆழ்ந்து தான் வேறு உலகம் வேறு என்றல்ல இரண்டுமே ஒன்றே . நாமே இறைவன் என்பதை கடுந்தவம் மூலம் உலகிற்கு உணர்த்தியது மட்டுமல்லாமல் , வாழ்ந்து காட்டியும் தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும் என்ற எல்லையற்ற பெருங்கருணையால் மனித குலத்தை மேம்படுத்தவும் மனிதத்தின் மூலம் அனைத்து உயிரிகளையும் நேசித்து அவைகளையும் உயர்த்த வழி கூறிய மஹா சித்த புருஷர்கள் வாழ்ந்த ஞான பூமி இது.


இந்த யோகக்கலை (யோக விஞ்ஞானம்)யை விண்ணவரும் மண்ணவரும் கற்றுத் தேர்ந்து இறைவனோடு இணையும் வித்தையை நமக்கு அளித்த
 மஹா புருஷர் ஞான சிம்மம்மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலியாவர்.
அவர் ஒரு அவதார புருஷராகவும் , வேத புருஷராகவும்,சித்த புருஷராகவும் விளங்குபவர்.

பார் முழுதும் இன்று பரவி வளர்ந்து நிற்கும் இந்த யோகக்கலையை அடிப்படையாக வைத்தே பற்பல அருளாளர்களும், மஹான்களும் அவரவர்களுக்கு உரிய விளக்கங்களுடன் யோகத்தைப்பரப்பி வருகிறார்கள். இதில் பலர் ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியினை முன் நிறுத்தாமல், தாமே அதைக் கண்டுபிடித்தது போலவும் தத்தம் விளக்கங்களே சிறந்தது என்றும் குழப்பியும் வருகிறார்கள். யோகம் என்றால் (யோகா) என்பது ஆசனங்கள் எனக் கூறுபவரும் உண்டு. அதனை வியாபாரத்திற்க்குரிய தொழிலாகவும் மாற்றி வருபவரின் பெயர்பலகைகள் எண்ணிலடங்காதது.


யோகாசனம் என்பது யோகமும்+ஆசனமும் இரண்டறக் கலந்தது என்பதே சத்குரு பதஞ்சலி மஹரிஷியின் உண்மை விளக்கமாகும்.

இறைவனை முன்னிறுத்தியே இக்கலை மிளிர்கின்றது.

இதைத்தவிர்த்துக் கூறுவது அனைத்தும் இக்கலைக்குப் புறம்பானவையே.


யோகம் என்றால் இணைவது, சேர்வது என்பதே. நான் என்ற தூல உணர்வுக்கு அடிப்படையான புலன்களின் அறிவால், நான் யார் என்பதை அறிவது இயலாது. நான் என்ற தூலத்தின் அடிப்படை கொண்டும் அதன் துணை கொண்டும் , தூலத்துள்ளேயே ஒடுங்கி,தூலத்தின் மூலம் பிரகாசிக்கும், ஆன்மாவை (ஒரு இறைக்கூற்றை ) இறைவனோடு இணைப்பதே யோகமாகும்.

இவ்விணைப்பிற்கு உதவிடும் வகையில் , இவ்வுடலின் உள்ளே மறைந்து கிடக்கும் உடல் ஆற்றலைப்பெருக்கி (சூட்சம , காரண) சரீரங்களைக் கண்டுகொள்ளவும் , யோக முன்னேற்றங்களை அடைந்திடவும் " பிராணாயாமம்" ஒரு பாலமாகவும் அதுவே ஒரு யோகமாகவும் விளங்குகிறது.



இதன் மூலம் பஞ்ச/தச/பிராணன்களின் கூட்டிற்கு (கலப்பிற்கு) பிரதான பிராணன் என்ற- பிராண வாயுவினை வசப்படுத்துவதன் மூலம் அல்லது அதனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் , அதன் பல்வேறு மறைதல் , பிறிதொரு வாயுவின் கலப்பு ஆகிய நிகழ்வுகளின் வழியே குண்டலினியின் பேராற்றலை அடைதற்கும் பிராணாயாமம் என்ற தொழிற்படுதலே பிரதானமாகின்றது.

மஹரிஷி பதஞ்சலி தமது யோக சூத்திரத்தின் திறவுகோலாகவும் , யோகப்பயணத்தில் எட்டு விதமான பாதைகளைக் காட்டி இந்த எட்டினையும் ஒருங்கிணைக்கும் வழி வகை வித்தைகளை
தமது 195 சூத்திரங்களில் விளக்கியுள்ளார்.

இவை யாவும் வடமொழி மூலமாக உள்ளதாலும் அணுவினுள் கடல்களைப் புகுத்தியுள்ளது போல் தமது சூத்திர ( ஒரு, இரு, மூன்று) வரியினுள் அத்தனையும் அடங்கியிருப்பதால் , இதற்கு மொழி
-மற்றும் ஆன்மீக , யோக அடிப்படை உணர்ந்த பெரியோர்கள் அழகிய விளக்கங்களை நமக்குத் தந்துள்ளனர்.

அவர்களுள் கடலங்குடிப் பெரியவர் பிரம்மஸ்ரீ நடேச சாஸ்திரிகள் சுவாமி வீரத்துறவி விவேகானந்தர் , சுவாமி என்ற என். ஆர். சம்பத் அவர்கள் , சுவாமி ஸ்ரீ சிவானந்தா, சுவாமி ஸ்ரீ சச்சிதானந்தா, மகான் ஓஷோ மற்றும் எத்தனையோ அருட் செல்வர்கள் ஸ்ரீ பதஞ்சலி யோகசூத்திரங்களுக்கு உரைசெய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இந்த அடியேனது பணிவான வணக்கங்களை
-என்றென்றும் வைக்கிறேன்.


                                                யோக சூத்திரங்கள்

சமாதி பாதம் 51 சூத்திரங்கள்


சாதனா பாதம் 55 சூத்திரங்கள்


விபூதி பாதம் 55 சூத்திரங்கள்


கைவல்ய பாதம் 34 சூத்திரங்கள்


மொத்தம் 195 சூத்திரங்கள்

யோகம் பிராணயாமம்

ஆன்மீக முன்னேற்றங்களை அடைய முக்கியத்துவம் அளிப்பது மட்டுமில்லாமல் உடலைப்(physical body and mental health) பேணுவதற்கும் , மனதை மனநோய் மற்றும் அமைதியின்மை , மன அழுத்தம் ) இவற்றினின்று காத்து மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் அத்தியாவசியமான கலை யோகம், பிராணாயாமம் ஆகும்.

மேலும் குறிப்பாக நவீன மருந்துகளால் கூட தீர்க்க முடியாத ஆஸ்த்துமா , இதய நோய், நீரிழிவு நோய் , புற்று நோய்,ஆகிய ஆட்கொல்லி நோய்களை (முறையாகசெய்யும் பிராணாயாமம், யோகம் ) மூலம் நிச்சயமாகத் தீர்க்க முடியும் என நிரூபணமாகியுள்ளது.

பிராணக்காற்று (பிராண வாயு)பஞ்ச பூதங்களில்
 ( நிலம், நீர்,காற்று (வாயு) , நெருப்பு ,ஆகாயம் )மிக முக்கிய பங்காற்றுகிறது மட்டுமின்றி பிராண வாயு பயிற்சியினால் ஏனைய
(பஞ்சபூதக் குறைபாடுகளை)க் கட்டுப்படுத்தவும் முழுதும் சரி செய்யவும் இயலுமென்பது சித்தர்கள் வாக்கு.

முந்தைய , தற்போதைய இந்திய தத்துவ ஞானிகள் கண்டுபிடித்த , ஒத்துக் கொண்ட பயிற்சியின் மூலம் பலன் அடைந்த படி, கீழ்க்கண்டவாறு விளக்கியுள்ளனர்.


ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி அவர்களின் சரகம் என்ற ஆயுர்வேத சாஸ்திரத்தில் மனித உடல் பஞ்ச பூத பொருட்கலப்பினால் அதனதன் விகிதங்கள் சரியாக இருக்கும் வரை நோய்கள் மற்றும் வயோதிகம் (மூப்பு) அவனைத் தீண்டுவதில்லை என உறுதி படக்கூறியுள்ளார் .

அச்சரிவிகிதக் கலவையினை அடிப்படையாகக் கொண்டு
மனித வளர்ச்சி மற்றும் உடல் திசுக்கள் பராமரிப்பு (Metabolic systerm) முதலியவைகளை மூன்று காரணிகளால் வாதம்-பித்தம்-சிலேத்துமம் என்ற அவைகள் தத்தம் முக்கிய இடத்தில் இருந்து கொண்டே செயலாற்றுகின்றன. இம்மூன்று காரணீயத் தனிமங்களின் விகிதங்கள் சமன்பாடு மாறுபடுகையில் மனித உடல் பெரும் பாதிப்பை அடைகின்றன. இதை திரிதோஷம் என்பார்கள் . இந்த தோஷத்தை அன்னமய கோசம் மூலம் கட்டுப்படுத்துதல் நிகழ்கின்றன.

எனினும் அம்மூன்றும் தன் ஆதிக்க இடங்களிலிருந்து மற்றோர் இடங்களுக்குச் செல்ல பயணிக்க இயலாது. உடலில் தேவையான இடங்களுக்கு தேவையான போது ,தேவையான விகிதங்களில் சென்று பங்களிக்க முடியாமல் போவதே இதன் குறைபாடுகளாகும்.


“நீருண்ட கார்மேகம் தானே பரவி மழை பெய்விக்க இயலாததும் , அதைக் காற்றின் துணை கொண்டு தக்க விடத்தில் பொழியச் செய்வது போல் “இத்திரிதோஷக் (குறைபாடு) குவியலை இடம் மாற்றி நன்மை பயக்கச்செய்ய, உடல் முழுதும் எடுத்துச்செல்ல பிராண வாயு என்றாகிய உயிர்க்காற்றால் பிராணாயாமத்தால் நேர் செய்ய இயலும் என்பதும் ரிஷிகளின் வாக்கு.


பிராணாயாமத்தால் (மன நலன்கள் பாதிப்பு) களுக்கு காரணமான
“ரஜோ” , “ தமோ” குணங்களையும் முழுதும் நீக்கி “சத்துவ” குணத்தை பிரித்தெடுத்து விளங்கச் செய்ய முடியும் என்பதே யோகத்தின் பிராணாயாமப்
-பொதுவாகும்.

பிராணாயாமத் துவக்க ப்பயிற்சியினை , மூச்சுப்பயிற்சியினை ரேசகம் (வெளிமூச்சு), பூரகம் (உள்மூச்சு ) முதலில் சரியாகச் செய்வதே ஆகும்.


1) நுரையீரலின் காற்றுப்பைகள் அதன் கொள்ளளவு முழுவதும் நிரப்புதல் என்ற செயலை ஒரே சீராக , பரபரப்பின்றி ஒரு கால அளவை நிர்ணயித்துக் கொண்டு (பயிற்சி தருபவரின் சொற்படி) நிகழ்த்துவது பூரகமாகும்.

2) உள்நிரப்பிய காற்றை ஒரே சீராக குறிப்பிட்ட கால அளவில் வெளிவிடுதல் ரேசகமாகும்.

3) ரேசகம், பூரகம் இரண்டையும் வலது இடது மூக்குத்துளைகளில் ஏற்றி இறக்குவது என்பதில், உள்ளிழுத்தலை இடது நாசி மூலமாகவும் , வெளிவிடுதலை வலது நாசி மூலமாகவும் மேற்சொன்னபடி சிறிது காலம் 15 அல்லது 30 நாட்கள் வரை இவ்விதம் பயிற்சி செய்தால் அடிமூக்கின் பின்புறம் நெற்றிப் பொட்டிற்கு உள்ளே ( புருவ மத்திக்கு நேர் கீழ் உள் பகுதியில் ) உள்ள இடங்கலை , பிங்கலை என்ற உணர்வுத் (தட்டுக்கள் /நாடித்தளம்) உணர்வு பெற்று தன் செயலைப் பதிவு செய்யும்.

இதன் பயனாக , உடலில் பிராண ஆதிக்க வாயில் திறப்பதோடு , முக்குணங்களில் ஒன்றான ரஜோ குணவியல்பு படிப்படியாகக் குறையத் துவங்கும். இந்த பயிற்ச்சிக்குப்பின், (ரேசக-பூரத்திற்க்குப்பின்) கும்பகம் என்ற மூச்சு உள் நிறுத்தம் என்ற பயிற்சி தொடருகின்றது .

கும்பகம் என்றால் அடைத்தல், நிரப்புதல் அசைவற்று இருக்கச்செய்தல் எனப் பொருள்படும்.

உள்ளிழுத்த மூச்சை வெளி விடாதபடி குறிப்பிட்ட கால அளவு நிறுத்தி வைத்தல் ஆகும்.

இக்கும்பகம் என்ற நிகழ்வு மூன்று வகைகளைக் கொண்டதாகும்.

அகக்கும்பகம்

புறக்கும்பகம்

தம்பனம்

என்பதாகும். வரிசைக்கிரமத்தில் கூறுகையில் நினைவகம்,முனைவகம்,பூரகம்  கும்பகம், ரேசகம்,என்ற நிலைகளாகப் பின்னப்பட்டதே பிராணாயாமம் ஆகும்.

கும்பகம் செய்கையில் குருவின் வழி காட்டுதல் அவசியம்.



ஒவ்வொரு நிகழ்வும் அமர்க்கை, திசை, காலம், தேசம், படர்க்கை என ஐந்து முகங்கள் கொண்டிருப்பதால் பொதுவான பிராணாயாம நியதிகள் எல்லோருக்கும் பொருந்தத் தக்கதல்ல என்பதே குரு உபதேசமாகும்.

மூச்சுப் பயிற்சியின் நல் விளைவுகளே பிராணாயாமத்தின் உயரிய பலன்கள் ஆகும்.

எனினும் பொதுவான விஷயங்கள் கூட புரியாதிருப்போர்க்கேன்ற இப்பிராணாயாமத்தொடர் விரிவாக்கப்பட வேண்டும் என்பதே ஸ்வார்த்தம் சத் சங்கத்தின் அமைப்பான மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்திற்கு மறைமுகமாய் சத்குரு இட்ட கட்டளை என்பதாகக்கருதி இவைகள் வெளியிடப்படுகின்றன.

No comments:

Post a Comment